Wednesday, February 23, 2011

தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன [ திருக்குர்ஆன் விளக்கம் ]


அஸ்ஸலாமு அலைக்கும்,,,

திருக்குர்ஆன் விளக்கம்

Source – Link

119. தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன

வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பது சமீபத்திய கண்டு பிடிப்பு. இதனால் தான் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன்  செத்து     விடுவான்.
அது போல் தான் தீக்காயத்தில் தோல் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் காண்கிறோம். பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஹம்மது நபிக்கு இது எப்படித் தெரியும்? திருக்குர்ஆன் 'அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம்' என்று கூறாமல் 'வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்' என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுவதென்றால் மனிதனைப் படைத்த இறைவனால் தான் சாத்தியமாகும். திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது. (இக்குறிப்புக்கான வசனம்: 4:56)

நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்
6801 உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (பத்துப் பேருக்கும் குறைவான) ஒரு குழுவினருடன் (சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை கற்பிப்பதில்லை; திருடுவதில்லை; குழந்தை களைக் கொல்வதில்லை;  உங்களிடையே அவதூறு கற்பித்து அதைப் பரப்புவதில்லை; எந்த நற்செயலும் எனக்கு மாறு செய்வ தில்லை என்று நான் உங்களிடம் உறுதி மொழி வாங்குகின்றேன். உங்களில் எவர் (இவற்றை) நிறைவேற்றுகிறாரோ அவரது பிரதிபலன் அல்லாஹ்விடத்தில் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களான இ)வற்றில் எதையேனும் ஒருவர் செய்து, (அதற்காக) அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குப் பரிகாரமாகவும் அவரைத் தூய்மையாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். (அவற்றில் எதையேனும் ஒருவர் செய்து பின்னர்) அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுவார்; அல்லாஹ் நாடினால் அவரைத் தண்டிப்பான்: அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்று கூறினார்கள்.19
-------------------------------------------------
புலனாய்வு பத்திரிக்கைகள்,

எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம். இந்தப் புலனாய்வு பத்திரிக்கைகள், (எதைப் புலனாய்வு செய்கின்றன என பிறகு பார்ப்போம்) என்ன சமூக அவலங்களைப் புலனாய்வு செய்து கிழிக்கின்றன என்று. நானும், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், ஜூனியர் விகடன் என அனைத்தையும் பார்த்துவிட்டேன். புலனாய்வு செய்கிறேன் பேர்வழி என பெண்களின் புலன்களை ஆயும், புலனாய்வு வேலையில் ஈடுபட்டுள்ளன இந்தப் பத்திரிக்கைகள். ஜூனியர் விகடன் எனப் பெயர் வைத்திருந்தாலும், இந்தப் புலன் ஆய்வு வேலைகளில் ஜூனியர் விகடன் தான் சீனியர்.

சில வாரம்களுக்கு முன்பு  'பாழாகும் பாடி' என்ற செய்தி வெளியாகியிருந்தது. அதாவது பாடி, போரூர் ஆகிய இடங்களில் போலீசு துணையுடன் விபச்சாரம் நடப்பதாகவும், அதனால் பொது மக்களுக்கு அசிங்கமான பல இடையூறுகள் ஏற்படுவதாகவும் எழுதியிருந்தனர். அந்த செய்தியை முழுதாய் படித்தால், "பசங்களா... சென்னைல எங்க விபச்சாரம் நடக்குதுனு தேடி அலையாதீங்க, போரூர்லயும், பாடிலயும் நல்லா நடக்குது"னு அறிவிப்பது போல் இருந்தது. சரி, அதை விடுங்கள். அதைவிடக் கொடுமை, அந்த செய்திக்கு அவர்கள் வெளியிட்டிருந்தப் படம் தான். முக்கால் பக்கத்துக்கு, கால்வாசி உடையுடன் நிற்கும் ஒரு பெண்ணின் படம். 
சரி செய்திக்குதான் படம் இப்படியென்றால், அந்தச் செய்தியின் முந்தையப் பக்கமான நடுப்பக்கத்தில் அரை நிர்வாணமாய் நிற்கும் நடிகையின் படம்!!!!

எதற்கு இப்படியொரு அரைகுறை படம்? விடலைப் பையன்களும், இன்னும் சிலரும் அந்தப் படத்தைப் பார்த்து பத்திரிக்கையை வாங்குவதற்காகத் தானே? அடப் பாவிகளா, இதைத்தானே அந்த போரூர் மற்றும் பாடி ஏரியாக்களின் மாமாக்களும் செய்கிறார்கள்? விபச்சாரம் செய்யும் பெண்ணைக் காண்பித்து தொழிலுக்கு அழைக்கிறார்கள். அவர்களுக்கும் ஜூனியர் விகடனுக்கும் என்ன வித்தியாசம்? அவர்களாவது வயிற்று பிழைப்புக்கு செய்கிறார்கள். ஆனால் விகடனோ அதே வேலையை, சில பிரதிகள் அதிகம் விற்க வேண்டி செய்கிறது. சொல்லப்போனால் ஜூனியர் விகடன் 'அந்த' தொழில் செய்பவர்களைவிட இன்னும் மோசம். 

பாடியிலும், போரூரிலும் விபச்சாரம் நடக்கிறது குடும்பப் பெண்கள் நடமாட முடியவில்லை. குடும்பத்துடன் வெளியே செல்ல முடியவில்லை என்றெல்லாம் மக்கள் புலம்புவதாய் செய்தி வெளியிட்டிருக்கும் விகடனுக்கு சில கேள்விகள். "உங்கள் ஜூனியர் விகடனை, குடும்பத்தை அருகில் வைத்துக் கொண்டு படிக்க முடியுமா? எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் நீங்கள் செய்யும் 'பெண் புலன் ஆய்வு'தான் தென்படுகிறது. 
போரூர், பாடி போன்ற இடங்களை விபச்சாரம் செய்பவர்கள் கெடுக்கிறார்கள் என புலம்பியிருக்கிறீரே, பத்திரிக்கை ஊடகத்தை ஏதோ ஷகீலா படம் போல் மாற்றும் உங்களை எவன் தட்டிக் கேட்பது?
போலீசையும், விபச்சாரிகளையும், மாமாக்களையும் குறை சொல்லவும், திட்டவும் உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? இந்தப் பதிவுக்கு நான், "விபச்சாரம் செய்யும் விகடன்" எனப் பெயர் வைத்ததில் என்ன தப்பு இருக்கிறது?

நான் 'ஒரு' செய்தியை உதாரணமாய் காட்டியிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் இருமுறை வரும் இதுபோன்ற இதழ்களில், பலமுறை அசிங்கங்கள் நடக்கின்றன. ஜூவியில் மட்டுமல்ல. அனைத்து புலனாய்வு பத்திரிக்கைகளும் ஈடுபட்டிருப்பது புலன்களை ஆய்வதில் தான்.  நக்கீரன் இதற்கு கொஞ்சமும் சலைத்ததள்ள. நித்தியா நந்தா விவகாரத்தில் ஆபாஸகாட்ச்சிகளை விவரமாக பார்க்க வேண்டும் என்றால் சந்தாதார்ர் ஆகுங்கள் என்று கடைவிரித்த்தை அனைவரும் பார்த்தோம்தானே. எனவே இவர்கள் புலன் ஆய்வு செய்வதை விட சதை ஆய்வு வியாபாரம் செய்வதுதான் அதிகம்.  
--
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

please forward to this website address for all islamic,christian and hindu brothers.
http://www.jesusinvites.com - http://www.onlinepj.com
அன்புச் சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவரையும் இந்த பயனுள்ள வலைத்தல குழுமத்தில் இனைந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறோம். 
இந்த குழுமத்தில் உங்களின் ஆக்கங்களை வெளியிடவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் அல்லது குழுமத்திலிருந்து விலகவும் விரும்பினால் payanullathagaval@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு மெயில் செய்யவும். நன்றி

No comments: