Thursday, August 18, 2011

இஸ்லாமிய குண நலன்கள்


1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?

பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.

(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)

சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4

3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :

இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.

(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

தாய்க்கு நன்மை செய்வது :

இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத், 

மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)

4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?

ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)

பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக

5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ?

ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)

தீய குணங்கள்


1 . தற்பெருமை

(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

2 . கொடுமை

அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)

3 . கோபம்

(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.

(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல்

உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).

5. பொய்

எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)

சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)

6. கெட்டவற்றை பேசுதல்

எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)

7. இரட்டை வேடம் போடுதல்

மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)

8. பாரபட்சம் காட்டுதல்

நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)

முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)

9. வரம்பை மீறிய புகழ்ச்சி – 

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)
10. பரிகாசம்

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)

11. வாக்குறுதி மீறல்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)

நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)

12. சண்டை

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)

13. குறை கூறல்

குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)

14. பொறாமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)

15. கெட்ட பார்வை

(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)

கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)

செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)


நற் குணங்கள்

1. நிதானம்

இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)

உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)

2. எளிமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, 'எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.' (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்)

3. தூய்மை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)

(நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)

4. மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்

மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்

உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)

5. நாவடக்கம்

இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)

எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)

6. அன்பாக பேசுதல்

கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)

7. பிறருக்கு உதவி புரிதல்

நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்)

8. உண்மை பேசுதல்

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)

விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)

9. நன்றி செலுத்துதல்

மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்)

10. வெட்கப்படுதல்

திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)
11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)

அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)

12. தவ்பா (மன்னிப்பு கோருதல்)

எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி 

13. உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்

நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)

தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,முஸ்லிம்
----------------
  தொடர்புடைய பதிவுகள் :-

Source http://www.ottrumai.net/TArticles/44-BelovedChildren-GoodAttitudes.htm

Wednesday, August 17, 2011

வாழ்நாள் நீட்டிக்கப்பட வேண்டுமா ?


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَاتَّقُواْ اللّهَ الَّذِي تَسَاءلُونَ بِهِ وَالأَرْحَامَ إِنَّ اللّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا {1}

...எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் 4:1



வாழ்நாள் நீட்டிக்கப்பட வேண்டுமா ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

உறவைப் பேணி வாழுங்கள் என்றும் உறவுகளை அலச்சியம் செய்யும் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்றும் சாதாரண உபதேசமாக அல்லாமல் எச்சரிக்கையாகவே விடுக்கிறது இஸ்லாம்.

உறவினர்களுக்கு ஸலாம் சொல்வதும், அவர்களை நலம் விசாரிப்பதும், அவர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வதும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்வது மட்டும் தான் உறவைப் பேணுதல் என்று நினைத்து விடாமல் இறைவன் நமக்கு கொடுக்கின்ற பொருளாதாரத்திலிருந்தும் உறவினர்களில் நலிவடைந்தோருக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை  முன்னேற்றி விடச் சொல்கிறது இஸ்லாம்.

திருமறைக்குர்ஆனில் 2:83, 2:177, 2:215, 4:1, 4:36, 8:75, 16:90, 17:26, 30:38, 42:23, 47:22, 59:7, 90:15 போன்ற வசனங்களில்; இறைவன் வலியுருத்திக் கூறுகிறான்.

மனிதர்கள் இவ்வுலகில் நிறைந்த பொருள்வளத்துடன் நீண்டகாலம் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக ஓடியாடி உழைத்து செல்வத்தைக் குவித்து வைத்துக் கொண்டு திட்டங்கள் பல தீட்டி அதில் வித விதமாக சுகமனுபவித்து வாழ்ந்து வருகின்றனர்.  

இப்படிப் பட்டவர்களின் உடல் நலத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டு விட்டால் இத்தனை செல்வங்களையும் உலகில் விட்டு விட்டு திடீரெனப் போய் விடுவோமோ என்ற அச்சத்தால் ஆயுளை கெட்டியாக்கிக் கொள்வதற்கு உயர் ரக ஆஸ்பத்திரயைத் தேடி மூலை முடுக்குகளுக்கெல்லாம் ஓடுவார்கள், அதில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என்றால் பிரசித்திப் பெற்ற(?) அவ்லியாக்களிடம் அடைக்கலம் புகுவார்கள், தாயத்து தட்டுத் தகடுகள் மூலம் மலக்குல் மௌத்துக்கு ( உயிரை எடுக்க வரும் வானவருக்கு ) தடுப்பு சுவர் போடுவதற்காக (?) மாந்திரீகர்களிடம் தஞ்சம் புகுவார்கள்.  

அவர்கள் எந்தெந்த வழிகளில் என்னமாய் ஓடினாலும் எதுவும் பலனளிக்காமல் இறுதியாக விதியில்  எழுதப்பட்ட விதம் அவர்களின் கதை முடிந்து விடுவதையும் பார்க்கிறோம்.

''நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே... திருக்குர்ஆன் : 4:78.

காரணம் அவர்களின் வாழ்வாதாரமும், வாழ் நாளின் முடிவும் ஏற்கனவே விதியில் எழுதப்பட்டு விட்டதால் அதை எந்த மருத்துவராலும், எந்த அவ்லியாவாலும், எந்த மாந்திரீகராலும் மாற்ற முடியாது, மாற்றியதில்லை அங்கெல்லாம் சென்றவர்களில் ஏராளமானோரின் முடிவு படுதோல்வியில் முடிந்ததைப் பலர் அறிவர்.

...எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன ஏடுகள் காய்ந்து விட்டன. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி.

எழுதியவனே மாற்றி எழுதுவான் 

உயிர் பிச்சைக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் நாள் கணக்கில், மாத கணக்கில் அவ்லியாக்களின் கப்ருகளிலும், ஆஸ்பத்திரியின் வார்டுகளிலும் காலத்தைக் கழிப்பவர்கள் கத்தைக் கத்தையாக கரன்சிகளை வாரி இறைப்பவர்களில் பலர் உறவினர்களின் வறுமையைப் போக்குவதற்காக சிறிது தொகையையும், அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக சிறிது நேரத்தையும் ஒதுக்க மாட்டார்கள். இவ்வாறு செலவிடுவதால் நேரத்தை ஒதுக்கி அலைவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்றே அலச்சியம் செய்வார்கள். ஆனால் அதில் எண்ணிப் பார்க்க முடியாத பலன் இருப்பதை அவர்கள் அறிவதில்லை.

இறைவன் நமக்கு தரக்கூடிய பொருளாதாரத்திலிருந்து சிறிதை தனது பெற்றோர், உற்றார் உறவினர்களுக்கு செலவிட்டு சிறிது நேரத்தை ஒதுக்கி அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுத்து அவர்களுடன் இணக்கத்துடன் வாழ்ந்து வந்தால் உயர் ரக ஆஸ்பத்திரியை தேடி ஓட வேண்டிய தேவை இல்லாமல், பிரசித்திப்பெற்ற(?) தர்வாவில் அடைக்கலம் புக வேண்டிய அவசியமில்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தையம், வாழ் நாளையும் வல்லோன் இறைவன் நீட்டித்துத் தருவதாக இறைநம்பிக்கையாளர்களுக்கு இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

தம் வாழ்வாதாரம்(ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்களும், அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் அறிவிக்கின்றனர். புகாரி 5985, 5986.

உறவுகளைப் பேணி வாழாவிட்டால் விதியில் எழுதியபடி மட்டும்  நடக்கும் வேறொன்றும் நிகழாது என்று எண்ணி விட்டு விடக்கூடாது அவ்வாறு எண்ணி உறவுகள் விஷயத்தில் அலச்சியம் காட்டுபவர்கள் இன்று மிகைத்திருப்பதைப் பார்க்கிறோம். அவ்வாறு நினைத்தே பலர் அற்ப காரணங்களுக்காக அறுபட முடியாத தொப்புள் கொடி உறவையும் கூட அற்பமாக எண்ணி அறுத்துவிட முணைகின்றனர். இப்படிப்பட்டவர்களிடம் இறைவனும் அவர்களுடனான உறவை உலகில் முறித்துக் கொள்வதாக இறைத்தூதர்(ஸல்)அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.  

உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) 'உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்'' என்று இறைவன்  கூறியதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 5988.

உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும் எனவே, 'அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்'' (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' புகாரி.5989

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அகில உலக அதிபதியாகிய அல்லாஹ்வுடனான உறவு உலகில் அவனுடைய அடியானுக்கு முறிந்து விட்டால் நியாயத் தீர்ப்பு நாளில்  அவனுடைய நிலை என்னவாகும் ? என்பதை எண்ணிப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.   

உறவை முறித்துக் கொள்பவர்கள் மீது இறைவனின் கோபம் இருப்பதை அறிந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தங்களை ஒதுக்கி வாழ்ந்த தங்களுடைய குடும்பத்தார்களிடம் நீயா ? நானா ? என்று ரோஷம் பாராட்டாமல் அவர்களே வழியச் சென்று உறவை புதுப்பித்துக் கொள்வார்கள் தங்கள் தோழர்களையும் அவ்வாறே நடந்து கொள்ள உபதேசம் செய்தார்கள். 

பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 5991.

அபூ ஹூரைராவே நற்குங்களை மேற்கொள்வீராக ! என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்  கூறியதும் இறைத்தூதர் அவர்களே! எவ்வாறு நான் நற்குணங்களைப் பேணுவது என்று கேட்டேன் அதற்கவர்கள் உன்னைத் துண்டித்து வாழ்பவருடன் நீ சேர்ந்து வாழ், உனக்கு அநீதம் செய்தவரை மன்னித்து விடு, உனக்கு தர மறுத்தவருக்கு நீ கொடுத்து உதவு என்று கூறியதாக அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல் : பைஹகீ

உலகில் ஒரு முறை பிறந்து விட்டால் மீண்டும் பிறக்கப் போவதில்லை அதனால் அடுத்து பிறக்கும் பொழுது பார்த்துக் கொள்வோம் என்று உறவுகளை தள்ளி வைக்க முடியாது.

அதேப் போன்று எப்பொழுது உலகிலிருந்து விடை பெறுவோம் என்ற அறிவும் நமக்கு கொடுக்கப்படாததால் உறவுகள் விஷயத்தில் தாமதப் படுத்த முடியாது.

செல்வ செறுக்குடனும், திடகாத்திரமான ஆரோக்கியத்துடனும் வாழும் காலத்திலேயே உற்றார், உறவினர்களில் வறியோருக்கு இயன்றளவு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து அவர்களின் மீது அன்பைப் பொழிந்து இணைந்து வாழ முயற்சிக்க வேண்டும்.

பாவங்கள் மன்னிக்கக் கூடிய புனித ரமளான் மாதம் மிகவும் அன்மித்து விட்டதால் நற்செயல்களை இப்பொழுதே தொடங்கி விடுவோம்.  

எழுதியபடி என்னையும், வாசித்தபடி உங்களையும் உறவுகளைப் பேணி அல்லாஹ்வின் அருளை அடைந்து கொள்ளும் நன் மக்ககளாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்புடன். Hayas.

.
  

The Miracle Drink






 

 
This MIRACLE DRINK has been circulating for a long time long ago. It is worth your while to take note. There is a celebrity Mr. Seto who swears by it. He wants to make it public to draw the attention of people who have cancers. This is a drink that can protect bad cells forming in your body or it will restrain its growth! Mr. Seto had lung cancer. He was recommended to take this drink by a famous Herbalist from China. He has taken this drink diligently for 3 months and now his health is restored, and he is ready to take a pleasure trip. Thanks to this drink! It does not hurt for you to try.
 
It is like a Miracle Drink! It is simple
You need one beet root, one carrot and one apple that combine together to make the JUICE !
 
Wash the above, cut with the skin on into pieces and put them into the juicer and immediately you drink the juice. You can add some lime or lemon for more refreshing taste.
 

 
This Miracle Drink will be effective for the following ailments:
 
1. Prevent cancer cells to develop. It will restrain cancer cells to grow.
2. Prevent liver, kidney, pancreas disease and it can cure ulcer as well.
3. Strengthen the lung, prevent heart attack and high blood pressure.
4. Strengthen the immune system
5. Good for the eyesight, eliminate red and tired eyes or dry eyes
6. Help to eliminate pain from physical training, muscle ache
7. Detoxify, assist bowel movement, eliminate constipation. Therefore it will make skin healthy & LOOK more radiant. It is God sent for acne problem.
8. Improve bad breath due to indigestion, throat infection,
9. Lessen menstrual pain
10. Assist Hay Fever Sufferer from Hay Fever attack.
 
There is absolutely no side effect. Highly nutritious and easily absorbs! Very effective if you need to loose weight. You will notice your immune system will be improved after 2 week routine. Please make sure to drink immediately from the juicer for best effect.
 
WHEN TO DRINK IT:
 
DRINK IT FIRST THING IN THE MORNING WITH THE EMPTY STOMACH! AFTER ONE HOUR YOU CAN EAT BREAKFAST. FOR FAST RESULTS DRINK 2 TIMES A DAY, IN THE MORNING AND BEFORE 5 P.M.
 
YOU WILL NEVER REGRET! IT DOES NOT COST YOU MUCH MONEY! PLEASE CIRCULATE TO YOUR FAMILY AND FRIENDS.
<
 
This MIRACLE DRINK has been circulating for a long time long ago. It is worth your while to take note. There is a celebrity Mr. Seto who swears by it. He wants to make it public to draw the attention of people who have cancers. This is a drink that can protect bad cells forming in your body or it will restrain its growth! Mr. Seto had lung cancer. He was recommended to take this drink by a famous Herbalist from China. He has taken this drink diligently for 3 months and now his health is restored, and he is ready to take a pleasure trip. Thanks to this drink! It does not hurt for you to try.
 
It is like a Miracle Drink! It is simple
You need one beet root, one carrot and one apple that combine together to make the JUICE !
 
Wash the above, cut with the skin on into pieces and put them into the juicer and immediately you drink the juice. You can add some lime or lemon for more refreshing taste.
 

 
This Miracle Drink will be effective for the following ailments:
 
1. Prevent cancer cells to develop. It will restrain cancer cells to grow.
2. Prevent liver, kidney, pancreas disease and it can cure ulcer as well.
3. Strengthen the lung, prevent heart attack and high blood pressure.
4. Strengthen the immune system
5. Good for the eyesight, eliminate red and tired eyes or dry eyes
6. Help to eliminate pain from physical training, muscle ache
7. Detoxify, assist bowel movement, eliminate constipation. Therefore it will make skin healthy & LOOK more radiant. It is God sent for acne problem.
8. Improve bad breath due to indigestion, throat infection,
9. Lessen menstrual pain
10. Assist Hay Fever Sufferer from Hay Fever attack.
 
There is absolutely no side effect. Highly nutritious and easily absorbs! Very effective if you need to loose weight. You will notice your immune system will be improved after 2 week routine. Please make sure to drink immediately from the juicer for best effect.
 
WHEN TO DRINK IT:
 
DRINK IT FIRST THING IN THE MORNING WITH THE EMPTY STOMACH! AFTER ONE HOUR YOU CAN EAT BREAKFAST. FOR FAST RESULTS DRINK 2 TIMES A DAY, IN THE MORNING AND BEFORE 5 P.M.
 
YOU WILL NEVER REGRET! IT DOES NOT COST YOU MUCH MONEY! PLEASE CIRCULATE TO YOUR FAMILY AND FRIENDS.

Hayas.

வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம்


நிச்சயமாக! முஃமினான அடியானுக்குச் சுவர்க்கத்தில் கொடையப்பட்ட ஒரே முத்தினாலுள்ள கூடாரம் தயார் செய்யப்பட்டிருக்கும். வானில் அதன் உயரம் அறுபது மைல்களாலும். அக்கூடாரத்தில் அவனுடைய குடும்பத்தார்கள் வசிப்பார்கள். அவர்களை அவன் சுற்றிப் பார்த்து வருவான். (கூடாரம் விஸ்தீரணமாக இருப்பதால்) அவர்கள் சிலர், சிலரைப் பார்க்கமாட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் முத்துக்களின் வகைகளால் உருவாக்கப்பட்ட பல அறைகள் உண்டு, அவைகள் அனைத்தின் உள் பக்கத்திலிருந்து வெளிப்பக்கத்தையும், வெளிப்பக்கத்திலிருந்து உள் பக்கத்தையும் பார்க்கலாம். எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத இன்பங்களும் அருட்கொடைகளும்; அங்கிருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனனுல் பைஹகி)
சுவர்க்கத்தின் மரங்கள்
1. சுவர்க்கத்தில் ஒரு மரமுண்டு, நூறு வருடம் பிரயாணம் செய்யும் ஒரு பிரயாணி அதன் நிழலை கடக்க முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
2. சுவர்க்கத்திலுள்ள எல்லா மரங்களின் அடியும் தங்கத்திலானுள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
3. ஒரு மனிதன் சுவர்க்கத்திலுள்ள (மரத்திலிருந்து) ஒரு கனியை கொய்தால் அந்த இடத்தில் இன்னுமொரு கனி வந்துவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னதுல் பஸ்ஸார்)
4. நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் அருகில் (அதன் நிழலில்) நல்ல வலிமையான, விரைவாகச் செல்லும் குதிரையில் சவாரி செய்யும் மனிதன் நூறு ஆண்டுகள் சவாரி செய்து சென்றாலும், அம்மரத்தைக் கடந்து செல்ல முடியாது. (அத்தகு மாபெரும் மரமாகும் அது) புகாரி, முஸ்லிம்
சுவர்க்க வாசிகளின் பதவிகள்
சுவர்க்கவாசிகள், சுவர்க்கத்தில் தங்களை விட மேலான அந்தஸ்தைப் பெற்று, சுவர்க்கத்தின் மேல் அறைகளில் வசிப்போரை காண்பது, நீங்கள் அடிவானில் கிழக்கிலிருந்தோ அல்லது மேற்கிலிருந்தோ சென்று கொண்டிருக்கும் – இலங்கும் நட்சத்திரத்தைக் காண்பது போன்றாகும்.
இது அவர்களின் மத்தியிலுள்ள பதவி மற்றும் அந்தஸ்தின் இடைவெளியின் காரணமாகும். அப்பொழுது, தோழர்கள் யா ரஹுலல்லாஹ்! அவை நபிமார்களின் தங்குமிடங்களாகும். மற்றவர்கள் அவர்களை அடையமுடியாது எனக் கூறினார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம், (அவை நபிமார்களின் தங்குமிடங்கள் போன்றவை தான்)எனினும் என் உயிர் எவன் கைவசமிருக்கிறதோ, அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள்(சுவர்க்கத்தின் அவ்வுயர்ந்த அறைகளில் வசிக்கும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்) ஈமான் கொண்டு நபிமார்களை உண்மைப் படுத்திய சத்திய சீலர்கள் ஆவர் – எனப் பகர்ந்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தின் கடை வீதி
நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு கடை வீதி உள்ளது. ஒவ்வொரு ஜும்ஆ அன்றும் சுவர்க்கவாசிகள் அந்தக் கடைவீதிக்கு வருவார்கள். அப்பொழுது வடக்குத் திசையிலிருந்து ஒரு காற்று வீசும். அக்காற்று அவர்களின் முகங்களிலும், ஆடைகளிலும் தவழ்ந்து நறுமணத்தைப் பரப்பும். அதனால் அவர்களின் அழகும், பொழிவும் அதிகமாகும். அதே நிலையில் அவர்கள் தங்களின் குடும்பத்தாரிடம் திரும்புவார்கள். அப்பொழுது அவர்கள் குடும்பத்தார்கள்., அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக உங்களின் அழகும், பொலிவும், அதிகமாகி விட்டது என்பார்கள். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களுக்குப் பின் உங்களின் அழகும், பொலிவும் கூட அதிகமாகி விட்டது என்பார்கள். (முஸ்லிம்)
சுவர்க்கத்தின் நதிகளும் அது ஓடும் வழிகளும்
மிஃராஜின் போது ஏழாவது வானத்திலுள்ள சித்ரத்துல் முன்தஹா எனக்கு உயர்த்தி காட்டப்பட்டது. அதனுடைய பழங்கள் ஹஜர் என்ற ஊரிலுள்ள குடம் போன்றதாகும். அதனுடைய இலைகள் யானையின் காது போன்றதாகும். அதனுடைய தண்டிலிருந்து வெளிப்படையான இரு ஆறுகளும் மறைமுகமான இரு ஆறுகளும் ஓடுகின்றது. ஜிப்ரீலே இது என்னவென்று? நான் கேட்டேன். மறைமுகமான இரு ஆறுகளும் சுவர்க்கத்தில் ஓடுகின்றது, வெளிப்படையான இரு ஆறுகளும் நைலும் ஃபுறாத்துமாகும் என ஜிப்ரீல்(அலை) அவர்கள் அறிவித்தார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல் கவ்தர் சுவர்க்கத்திலுள்ள ஆறாகும், அதனுடைய இரு ஓரங்களும் தங்கமாகும். முத்து பவளத்தின் மீது அது ஓடுகின்றது. அதனுடைய மண் கஸ்தூரியை விட மிகவும் மணமானது. அதனுடைய தண்ணீர் தேனைவிடவும் இனிமையானது, ஐஸ் கட்டியை விடவும் வெண்மையானது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
சுவர்க்க வாசிகளின் விரிப்புகள்
(ஒன்றில் மேல் ஒன்றாக) உயரமாக்கப்பட்ட விரிப்புகளிலும் (அமர்ந்திருப்பார்கள்) ’27:34′ என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கு நபி(ஸல்) அவர்கள் விளக்கமளிக்கும் போது இரண்டு விரிப்புகளுக்குமிடையில் வானத்திற்கும் பூமிக்குமிடையிலுள்ள தூரத்தை போன்றதாகும் என கூறினார்கள். (அஹ்மத்)
சுவர்க்கத்திலுள்ள ஒரு விரிப்பிற்கும் மற்ற விரிப்பிற்குமிடையிலுள்ள உயரம் வானத்திற்கும் பூமிக்குமிடையிலுள்ள தூரத்தை போன்றதாகும். அவ்விரண்டுக்கு மத்தியிலுள்ள தொலைவு 500 ஆண்டுகள் பிரயாணம் செய்யும் அளவாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் ”இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும். 55:54
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது – ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். 56:15,16
சுவர்க்க வாசிகளின் ஆபரணங்கள்
1. சுவர்க்கவாசிகளில் ஒரு ஆண் இவ்வுலகத்தை பார்த்து அவர் (அணிந்திருக்கும்) காப்பு இவ்வுலகுக்கு தெரிந்து விட்டால் நட்சத்திரங்களின் ஒழியை சூரியன் மறைப்பது போல் அவரின் (ஆபரணத்தின்) பிரகாசம் சூரியனின் ஒழியை மறைத்துவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
2. உளு செய்யும் போது தண்ணீரை (உடலில்) செல்லுத்தும் அளவிற்கு ஒரு முஃமினுக்கு (நாளை மறுமையில்) ஆபரணங்கள் அணுவிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
3. சுவர்க்கவாசி, சுவர்க்கத்திலே ஒரு பக்கமிருந்து அடுத்த பக்கம் சாய்வதற்கு முன் ஒரு பக்கத்திலேயே 70 வருடம் சாய்ந்திருப்பார், அப்போது ஒரு பெண் வந்து அவரின் இரு தோள்புஜத்தையும் தட்டுவாள். அவளின் கன்னத்திலே அவரின் முகத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்ப்பதை விட மிகத் தெளிவாக பார்ப்பார். அந்தப் பெண்ணின் மீதுள்ள மிகக்குறைந்த அந்தஸ்துள்ள முத்துக்கள் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலுள்ள பகுதிகளை இலங்கவைத்து விடும். அந்தப் பெண் அவருக்கு ஸலாம் கூறுவாள், அவரும் அதற்கு விடை கூறிவிட்டு, நீ யார்? என கேட்பார். நான்தான் உனக்கு மேலதிகமாக கொடுக்கப்படும் (கூலி) எனக் கூறுவாள். அவள் 70 புடவைகளை அணிந்திருப்பாள். அதில் குறைந்த அளவானது நஃமான் என்னும் சிவப்பு நிற தாவரத்தைப் போன்று மெதுமையான பழிச்சென்று இலங்கக்கூடியதாகும். அப்புடவைகளையெல்லாம் தாண்டி அவளின் காலில் உள்ள மஞ்சையை பார்க்கும் அளவு அவரின் பார்வை செல்லும். அப்பெண்ணின் மீது தங்கத்தினாலும் வைரக் கற்களினாலும் செய்யப்பட்ட கிரீடம் அணியப்பட்டிருக்கும். அதிலுள்ள குறைவான அளவுள்ளது கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியிலுள்ள பகுதியை இலங்க வைத்துவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
சுவர்க்க வாசிகளின் பண்புகள்
சுவர்க்கத்தில் நுழையும் முதல் கூட்டத்தினரின் தோற்றம், பெளர்னமி இரவின் சந்திரனின் தோற்றத்தைப் போன்றதாகும். அதில் அவர்கள் உமிழமாட்டார்கள், அவர்களுக்கு மூக்குச்சளியும் ஏற்படாது, அவர்கள் மலங்கழிக்கவும் மாட்டார்கள், அதில் அவர்களின் பாத்திரம் தங்கமாகும். அவர்களின் சீப்புகள் வெள்ளியினாலும் தங்கத்தினாலுமாகும், அவர்களின் நெருப்பு கங்கிகள் (மணத்தை ஏற்படுத்தக்கூடிய வகைகளின் ஒன்றாகிய – அலுவ்வா – என்னும் வகையைச் சேர்ந்த மரத்திலாகும்) அவர்கள் தெளிப்பது கஸ்தூரியாகும், அங்குள்ள ஒவ்வொருவருக்கும் இரு மனைவிகள் இருப்பார்கள். அவர்களின் அழகால் அவ்விருவரின் கெண்டைக்காலின் மஞ்சையை அவ்விருவரின் சதையை தாண்டியும் அவர் பார்ப்பார். அவர்களுக்கு மத்தியில் கருத்து முறன்பாடோ ஒருவருக்கொருவர் கோபம் கொள்வதோ இருக்காது, அவர்களின் உள்ளங்கள் ஒரு மனிதனின் உள்ளம் போன்றதாகும், காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை துதித்த வண்ணம் இருப்பார்கள். (புகாரி)
(நல்லமல்களை செய்து அந்த சொர்க்கத்திற்கு செல்லும் வாய்ப்பினை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக)
குறிப்பு:
அல்லாஹும்ம
இன்னி அஸ்அலுக ஜன்னத்துல் பிர்தௌஸ், அஊது பிக மினன்னார்.
 ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனம் வேண்டியும் நரக நெருப்பிளிருந்தும் பாதுகாப்பு பெற நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த பிரார்த்தனை.

Hayas.

ஸஹர் நேரத்து உணவு


அல்லாஹ்வின் திருப்பெயரால்....

...وَكُلُواْ وَاشْرَبُواْ حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ مِنَ الْفَجْرِ

...வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிரிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!... திருக்குர்ஆன் 2:187


ஸஹர் நேரத்து உணவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சூரியன் உதித்து தனது ஒளிக் கதிர்களை இலேசாக வெளியாக்கும் போது தான் இரவு என்ற கருப்பு நூல் மறைந்து வெளிச்சம் என்ற வெள்ளை நூல் வெளிவரும் ஆனாலும் நம்முடைய முன்னோர்கள் அர்த்தமற்ற நவைத்து ஸவ்ம கதின் என்ற பாடத்தை மனனம் செய்து வைத்துக் கொண்டு இரவு மூன்று மணி என்ற வரையறையை ஏற்படுத்திக்கொண்டு ஸஹர் உணவு உண்டு விட்டு உறங்கி விடுபவர்கள் இன்றும் அதிகம் உள்ளனர்.

திருமறைக்குர்ஆனில் இறைவன் ஒரு சட்டத்தைக் கூறி அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்வடிவம் கொடுத்தப்பின்னர் அதற்கு வேறொரு செயல்வடிவம் கொடுத்து செயல்படுவர்களின் மார்க்க் அமல்கள் இறைவனிடம் நிராகரிக்கப்பட்டுவிடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

'நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்' என்று 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்''  நூல்: முஸ்லிம் 3541

நோன்பு என்பதே மனிதன் தன்னை தூய்மை படுத்திக் கொள்வதற்காக அல்லாஹ் வழங்கிய மாபெரும் அருட்கொடையாகும். அதிலும் தங்களது கை சரக்குகளைப் புகுத்தி கலங்கப்படுத்தி விட்டால் எப்படி அதில் நம்மை தூய்மை படுத்திக் கொள்வது ?

அல்லாஹ் கூறிய விதம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் ரமலானை அணுகினால் தான் நம்மை தூய்மைப் படுத்தி கொள்ள முடியும் !

அந்த நேரம் எதுவரை ?
''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகி விட்டார்கள்!'' என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்; நான் 'பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?' என்று கேட்டேன். அதற்கவர் 'ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!'' என்று பதிலளித்தார். நூல். புகாரி 1921. அனஸ்(ரலி) அறிவித்தார்.

இதுதான் அல்லாஹ் கூறிய வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகும் வரை என்ற வசனத்திற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வரையறுத்துக் கொடுத்த நேரமாகும்.

ஸஹர் உணவு உண்பது சிறந்தது
''நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!'' 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 1923.

சாதாரண நாட்களில் காலையில் உண்ணக் கூடிய உணவு மூன்று அல்லது நான்கு மணி நேரமே தாக்குப்பிடிக்கும் லுஹர் தொழுது முடித்ததும் வேகமாக எழுந்துச் சென்று சாப்பாட்டில் அமர்ந்து விடும் அளவுக்கு பசி ஏற்பட்டு விடும்.

ஆனால் நோன்பு நாட்களில் அதிகாலை உறக்கத்தில் எழுந்து அவ்வளவாக உண்டிருக்க மாட்டோம் ஆனாலும் அது மக்ரிப் வரை தாக்குப்பிடிக்கிறதென்றால் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம் அதனால் தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்த மாதம் முழுவதையும் அருள் வளம் மிக்க மாதம் என்று வர்னித்துக் கூறினார்கள். இறைவன் நாடினால் நாம் ஸஹர் நேரத்து உணவு உண்டு அல்லாஹ்வின் அபிவிருத்தியை அடைந்து கொள்ள முயற்சி செய்வோம்.

இறைவனும், இறைவனின் தூதரும் கூறிய விதம் கூறிய நேரத்தில் ஸஹர் செய்வதன் மூலமாகவே ஃபஜ்ரு தொழுகையும் ஜமாத்துடன் நிறைவேற்றும் பாக்கியம் கிடைக்கிறது.

ஸஹர் செய்வது தவறினாலோ அல்லது மூன்று மணிக்கு ஸஹர் செய்து விட்டு உறங்கி விட்டாலோ ஃபஜ்ரு தொழுகை தவறி விடும் துர்பாக்கிய நிலை நன்மைகளை அறுவடை செய்யும் ரமலான் மாத்தில் ஏற்பட்டு விடக்கூடாது.

எழுதியபடி எம்மையும், வாசித்தபடி உங்களையும் அமல் செய்யம் நன்மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !

ஸஹர் நேரத்து சட்டங்களை அறிந்திட கீழ்காணும் லிங்கை சொடுக்கவும்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் - Hayas.