Monday, January 25, 2010

அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளி பவள விழா

அபிராமம் :



அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளி பவள விழா (Dinamani)

கமுதி,ஜன.24: கமுதி அருகே அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளி பவள விழா மற்றும் புதிய கட்டடம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்வி பொறுப்புக் கழகத் தலைவர் ஓ.எம்.அகம்மது லத்தீப் தலைமை வகித்தார். உதவித் தலைவர் வி.எம்.முகம்மது முத்து அபுபக்கர், பொருளாளர் பி.எம்.முகம்மது அலி, நிர்வாக் குழு உறுப்பினர்கள் ஏ.நத்தர் முகைதீன், எஸ்.ஏ.அப்துல் ரசீத், பி.செயயது சம்சுக்கனி, எஸ்.எம்.இக்பால் அகம்மது, என்.அபுபக்கர் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்விப் பொறுப்புக் கழகச் செயலர் எஸ்.ஏ.செயóயது இப்ராகிம் வரவேற்றார். பவள விழா நினைவு கட்டடத்தை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் எஸ்.எல்.எம்.உபையத்துல்லாவும், வகுப்பறைகள் புதிய கட்டடத்தை கே.முருகவேல் எம்.எல்.ஏ.வும் திறந்துவைத்துப் பேசினர். விழா மலரை ஜே.கே.ரித்தீஷ் எம்.பி. வெளியிட, மலரை வி.எம்.அப்துல்கரம் பெற்றுக்கொண்டார்.
விழாவில் கமுதி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பி.கே.கிருஷ்ணன், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் என்.சக்திமோகன், ராமநாதபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பி.பூலோக சுந்தர விஜயன், உலக பன்னாட்டு தமிழ் உறவு மன்ற அமைப்பாளர் கவிக்கோ வா.மு.சேதுராமன், இஸ்லாமியக் கழகப் பொதுச்செயலர் எஸ்.எம்.இதயத்துல்லா, முதுகுளத்தூர் ரகுமானியா தொழிற்பயிற்யி நிறுவன தாளாளர், டாக்டர் எஸ்.அப்துல்காதர், கமுதி வி.எல்.ஏ. பட்டேல் கல்விச் சங்கத் தலைவர் எஸ்.எல்.முஸ்தபா உள்பட பலர் பேசினர்.
விழாவில் அபிராமம் பேரூராட்சித் தலைவர் பி.கணேஷ்குமார், முன்னாள் தலைவர் வனிதா கந்தன், செயல் அலுலர் நெடுஞ்செழியன், கமுதி வட்டாட்சியர் ஆறுமுகம் நயினார், கமுதி பேரூராட்சித் தலைவர் எம்.எம்.அம்பலம், மற்றும் அபி
ராமம், நத்தம் உள்ளிட்ட முஸ்லீம் ஜமாத்தார்கள், பிரமுகர்கள், ஆசிரியர்,
ஆசிரியைகள், மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தலைமையாசிரியர் எஸ்.பசீர் அகம்மது நன்றி கூறினார்.

ABIRAMAM MAINTHAN.



அபிராமம் முஸ்லீம் மேனிலைப்பள்ளிபற்றிய சுருக்கமான வரலாறு :

அபிராமம் , நத்தம் - ஊர்வாழ் மக்களைக் கொண்டு ரங்கூனில் "முஸ்லிம் வித்தியா தர்ம பரிபாலன சபை" ஆரம்பித்து அதன் ஆயுட்காலத் தலைவராக இருந்து தனது ௮ ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்து தன்னுடைய பெரும் நிதி உதவியாலும், அபிராமம், நத்தம் ஊர்களின் பெருந்தனம் படைத்த வணிகர்கள் அளித்த பெரும் நிதியாலும் அபிரமமத்தில் இந்த பள்ளி ' H ' வடிவ கட்டிடம் கட்டப்பட்டு 1934 ஆம் ஆண்டு உயர்நிலைக் கல்வி பயிலும் பள்ளியாக உருவாக காரணமாக இருந்தவர்.





"முஸ்லிம் வித்தியா தர்ம பரிபாலன சபை" ஆல் இப்பள்ளி கட்டுவதற்கு நாடியபொழுது அப்பொழுதைய நிவாகியான இவர் 7 வருடம் இந்த பள்ளிக் கட்டிடதிர்க்காக தன்னுடைய உடல் உழைப்பை அர்பணித்தவர்.





"முஸ்லிம் வித்தியா தர்ம பரிபாலன சபை" ஆல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளி ஒரு தருணத்தில் வழிநடத்த பொருளாதார வசதியற்று தத்தளித்த பொழுது பேருதவி செய்தவர்.




அபிராமம் , நத்தம் மக்களின் கல்வி வளர்ச்சிக்கென கான்பஹதூர் ஜனாப். V.M. அப்துல் ரஹ்மான் அம்பலம் அவர்களின் தலைமையின் கீழ் அப்பொழுது பர்மாவில் வாணிபம் செய்து வந்த அபிராமம், நத்தம் முஸ்லிம் பெரியோர்களின் முயற்சியால் அபிரமத்தில் 23.06.1924 -யில் முஸ்லிம் செகண்டரி ஸ்கூல் என்ற பெயரில் உயர் தொடக்கப்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கென ஒரு பெரும் நிதி திரட்டி 03.03.1928 யில் ரங்கூன் நகரில் அபிராமம் முஸ்லிம் வித்தியா தர்ம பரிபாலன சபை என்ற பெயரில் 1860 ஆம் வருடத்து சங்க Registration 21 வது ஆக்டுப்படி பதிவு செய்யப்பட்டது. இச்சபைக்கு ஜனாப். V.M. அப்துல் ரஹ்மான் அம்பலம் அவர்கள் முதல் ஆயுட்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சபையினரின் முயற்சியால் 01 .02 .1934 ஆம் ஆண்டு முதல் இது உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.

கான்பஹதூர் ஜனாப். V.M. அப்துல் ரஹ்மான் அம்பலம் அவர்களின் பெரும் நிதி உதவியாலும், அபிராமம், நத்தம் ஊர்களின் பெருந்தனம் படைத்த முஸ்லிம் பெரியோர்களின் தாராளமான பெரும் நிதியாலும் அபிரமமத்தில் இந்த பள்ளி ' H ' வடிவ கட்டிடம் 8 ஏக்கர் நிலப்பரப்பளவில் கட்டப்பட்டு 1934 ஆம் ஆண்டு உயர்நிலைக் கல்வி பயிலும் பள்ளியாக உயர்த்தப்பட்ட நம் பள்ளி , "முஸ்லிம் உயர் நிலைப் பள்ளி" என்ற பெயருடன் இக்கட்டிடதிலேயே 01 .02 .1934 ஆம் ஆண்டு முதல் இயங்க ஆரம்பித்து நம் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு கான்பஹதூர் ஜனாப். விஜயன். அப்துல் ரஹ்மான் அம்பலம் 8 ஏக்கர் நஞ்சை நிலம் நம் பள்ளிக்கு இலவசமாக கொடுத்து உதவினார்கள்.


அபிரை.மைந்தன்.

1 comment:

Kannan said...

மிகவும் அருமை